தாவூத் நபி வரலாறு

தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் வழங்கப்பட்டது (இசை)
(கிருத்தவர்கள் பழைய ஏற்பாட்டின் இதற்கு சங்கீதம் என்பார்கள் )
4:163 (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்ததுபோலவே, உமக்கும் நிச்சயமாக வஹீஅறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும்,இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும்,யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்குஜபூர்என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

17:55 உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவாகளைப் பற்றி நன்கு அறிவான்நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத்திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம் இன்னும்தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

தாவூத் நபிக்கு இனிமையான குரல் ..
புஹாரி எண் 5048

அபூ மூஸா(ரலி) அறிவித்தார் :
நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்)தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது' என என்னிடம் கூறினார்கள்.


தாவூத் நபிக்கு இறைவேதத்தை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது.
புஹாரி எண் 3417
நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது.தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச்சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார்.தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.
அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ்அறிவிக்கப்பட்டுள்ளது.

புஹாரி எண் 4713

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


இப்ராஹிம் இஷ்காக் யாகுப் வழிதோன்றல்
6:84 நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள்அனைவரையும் நாம் நேர்வழியில்செலுத்தினோம் இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடையசந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன்ஆகியோரையும்நேர்வழியில் செலுத்தினோம் இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

புகாரி எண்:3421
முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
நான், 'ஸாத்' (என்னும் 38-வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர்களா?' என்று இப்னுஅப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், 'மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம்.இவ்வாறு... (நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின்வழியினையே (நீங்களும்) பின்பற்றுங்கள்" என்னும் (திருக்குர்ஆன் 06:84-90) திருக்குர்ஆன் வசனங்களைஓதினார்கள். பிறகு, 'உங்கள் நபி(ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும்படிகட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாம்" என்று கூறினார்கள்.

புஹாரி எண் 4807
அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்
நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், 'ஸாத்' அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக்கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்)சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?' என்று கேட்டேன். அதற்கு அன்னார், 'மேலும்,இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்' என்று தொடங்கி, '(நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும்பின்பற்றுங்கள்...' என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா?என்று கேட்டார்கள். பிறகு, 'எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக்கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபிதாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் ('ஸாத்' அத்தியாயத்தில்நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள்.

(திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உஜாப்' எனும் சொல்லுக்கு 'வியப்புக்குரியது' என்றுபொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கித்து' எனும் சொல்லுக்கு (பொதுவாக) 'ஏடு'என்று பொருள். ஆனால், இங்கு 'நற்செயல்களின் பதிவேடு' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்ஸத்' எனும் சொல்லுக்கு 'ஆணவம்கொண்டவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்மில்லத்துல் ஆம்ரா' (வேறு சமுதாயம்) எனும்சொல், குறையுயர் சமுதாயத்தைக் குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'இக்திலாக்' எனும் சொல்லுக்குப் 'பொய்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஸ்பாப்' எனும் சொல், வானத்தின்வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுன்த்' (படையினர்) எனும் சொல் குறையுயரைக்குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலாயிகல் அஹ்ஸாப்' (அந்தக் கூட்டத்தினர்)என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபவாக்' (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு '(உலகின்பால்) திரும்புதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இத்த கஃத்னாஹும் சிக்ரிய்யா' (நாம் அவர்களைப்பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா? என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம்அறிந்திருந்தோமா?

(திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்ராப்' எனும் சொல்லுக்கு 'வயதொத்தவர்கள்'என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்அய்த்' எனும் சொல்லுக்கு 'வணக்க வழிபாட்டில்செயலாற்றல்' என்றும், 'அல் அப்ஸார்' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்தசிந்தனை' என்றும் பொருள்.

மூஸா நபிக்கு பிறகு இஸ்ரவேலர்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர்
2:246 (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம்நபியிடம் "நாங்கள் அல்லாஹ்வின்பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்றுகூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல்இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார் அதற்கவர்கள் "எங்கள் மக்களையும், எங்கள்வீடுகளையும்விட்டுநாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல்இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக்கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக்காட்டித்திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

2:247 அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாகஅனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்தமுடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம்தகுதியுடையவர்கள் மேலும், அவருக்குத்திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள் அதற்கவர், "நிச்சயமாகஅல்லாஹ்உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும், அறிவாற்றலிலும், உடல்வலிமையிலும் அவருக்குஅதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச)அதிகாரத்தை வழங்குகிறான் இன்னும் அல்லாஹ் விசாலமானகொடையுடைய)வன் (யாவற்றையும்)நன்கறிபவன்" என்று கூறினார்.

2:248 இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்குஅடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத்பேழை) வரும் அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்துஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும் இன்னும், மூஸாவின்சந்ததியினரும் ஹாரூனின்சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும் அதை மலக்குகள் (வானவர்கள்)சுமந்துவருவார்கள் நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சிஇருக்கின்றது" என்று கூறினார். (

2:249 பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்)ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச்சேர்ந்தவரல்லர் தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும்அதிகமாக) நீர்அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத்தவிரபெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன்ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்குவலுவில்லை" என்றுகூறிவிட்டனர் ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோசிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதிகொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ்பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்றுகூறினார்கள். ( (

2:250 மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்றபோது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களைஉறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள்வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக்கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.

தாவூத் நபி ஜாலுதை கொன்றார்
2:251 இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையைமுறியடித்தார்கள். தாவூது ஜாலூத்தைக்கொன்றார். அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும்,ஞானத்தையும் கொடுத்தான். தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக்கற்பித்தான்(இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்)மற்றொருகூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாகஅல்லாஹ் அகிலத்தார் மீதுபெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
தாவூத் நபியின் மகன் சுலைமான்
38:30 இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம் சிறப்பான (நம்) நல்லடியார்,நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.

27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார் "மனிதர்களே! பறவைகளின் மொழிஎங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும்(ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம் நிச்சயமாக இதுதெளிவான அருள் கொடையாகும்.

34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற)பெருங் கொப்பரைகளையும், நகர்த்தமுடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில்நின்றும் நன்றி செலுத்துவோர்சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).

அல்லாஹ் இரும்பை வசப்படுத்தி கொடுத்தான்
21:80 இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை,அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாகஇருக்கிறீர்களா?

34:11 "வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாகஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாகஇருக்கின்றேன்" (என்றும் சொன்னோம்.)

34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித்தந்தோம்.

அல்லாஹ் மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்தி கொடுத்தான்
34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித்தந்தோம்

Comments

Popular posts from this blog

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது (வாஜிபாகும்) கட்டாயமாகும்

தொழுகையில் இமாமை முந்துதல்!