பேச்சு - ஓர் கலை
பேச்சு - ஓர் அருள் பேச்சு பேசும் திறன் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப் பெரியதோர் அருட்கொடையாகும். மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தும் பிரதான அம்சங்களில் ஒன்றாக பேச்சு விளங்குகின்றது. இதனாலேயே சமூகவியல் அறிஞர்கள் மனிதனை பேசும் பிராணி என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். தன்னை அளவற்ற அருளாளன் என அறிமுகப்படுத்தும் அல்லாஹ் தனது பேரருளுக்கு சான்றாக தான் மனிதனைப் படைத்து அவனுக்குப் பேசும் ஆற்றலை வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகின்றான். அளவற்ற அருளாளன்ளூ குர்ஆனை அவன் கற்றுக்கொடுத்தான் மனிதனைப் படைத்து , அவனுக்கு பேசவும் கற்றுக் கொடுத்தான்.( 55: 1- 4) பேச்சு ஓர் ஆயுதம் பேச்சு என்பது ஓர் அருள் மட்டுமல்ல அது ஓர் ஆயுதம். துப்பாக்கிகளால் , பீரங்கிகளால் சாதிக்க முடியாததை ஓர் அறிபூர்வமான , உணர்ச்சியுடன் கூடிய உரையினால் சாதிக்க முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. தான் பெற்றிருந்த நாவன்மையை வைத்து மக்களைக் கவர்ந்து , அவர்களை கட்டி வைத்த உலகை ஆண்டவர்கள் தான் எத்தனைப் பேர். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ' பேச்சில் ஒரு வகை வசியம் உண்டு ' என்றார்கள். கத்தியின