Posts

Showing posts from November, 2011

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா? எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி - எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த சில தாழ்த்தப்பட்ட மக்களை பசுவின் மீது கொண்ட பக்தியால் இவர்கள் அடித்தே கொலை செய்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. இவ்வளவு தீவிரமாக மாமிசத்திற்காக விலங்குகளை அறுப்பதை எதிர்க்கும் இவர்களது ஆட்சியும் செல்வாக்கும் அதிகம் உள்ள பகுதிதான் உத்திர பிரதேசம். மாமிச உணவை எதிர்க்கும் பாரதீய ஜனதாக் கட்சி தான் உத்திர பிரதேசத்தை 1992 இல் ஆண்டது. இங்கு தான் இந்தியாவில