ரமலானில் நாம் பெற்ற படிப்பினைகள் எல்லாப் புகழும், புகழ்ச்சியும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாகுக! அவனது சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களின் குடும்பத்தார் , தோழர்கள் , நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமீன்! இந்த ரமலானில் நாம் செய்த இபாதத்துகளை , அதனை தொடர்ந்து வரக்கூடிய மாதங்களிலும் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு சில செய்திகளை அறியத் தருகிறோம். ரமலான் முடிந்துவிட்டது சகஜ நிலைக்கு நாம் திரும்பி விட்டோம் பகலில் நோன்பு வைத்து இரவில் இறைவனை நின்று வணங்கிய மாதம் முடிவு பெற்றுவிட்டது அல்லாஹ்வின் அருளுக்குரிய பாவமன்னிப்பை பெற்று தரக்கூடிய மாதம் முடிவுக்கு வந்துவிட்டது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நரகத்தின் கதவுகள் மூடப்பட்ட மாதம் முடிவுக்கு வந்து சொர்க்கத்தின் கதவுகள் மூடப்பட்டு நரகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விட்டது ஷைத்தான் கட்டவிழ்த்து விடப்பட்டு விட்டான். ரமலானில் முடிந்தவரை இபாதத்துகளை நிறைவேற்றிய நாம் ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது ரமலானை வணங்கியவர்கள் அறிந்து க
Posts
- Get link
- Other Apps
ஸதகா (தர்மம்) செலவு அல்ல! சேமிப்பு!! எல்லாப் புகழும், புகழ்ச்சியும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக. அவனது சாந்தியும், சமாதானமும், சத்தியத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களின் குடும்பத்தார் , தோழர்கள் , குறிப்பாக நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்! இந்த உலகத்தில் நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டிருக்கின்றான். அவ்வாறு நல்லமல்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து வந்தால் நாளை மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்றும் அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். ரமலான் மாதத்தில் செய்ய கூடிய அமல்களில் ஒன்று தான தர்மம் செய்வது , இது எல்லா நாட்களிலும் செய்ய வேண்டிய அமல். ரமலான் மாதத்தில் தர்மம் செய்வது கூடுதல் மதிப்பு இருக்கிறது. அல்லாஹ் தர்மம் குறித்து கூறும் போது “இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் , சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள் ;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள் , பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. ( பயபக்தியுட
- Get link
- Other Apps
அமானிதம் கைகொள்வோம்! எல்லாப் புகழும், புகழ்ச்சியும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவனது சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களின் குடும்பத்தார் , தோழர்கள் , நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்! அல்லாஹு தாஆலா தனது அருள்மறையில் முஃமின்களின் குணங்களை வரிசையாக சொல்லி காட்டுகிறான் : நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள். அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். எனினும் , அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே , இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். அன்றி , அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்பட
பேச்சு - ஓர் கலை
- Get link
- Other Apps
பேச்சு - ஓர் அருள் பேச்சு பேசும் திறன் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப் பெரியதோர் அருட்கொடையாகும். மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தும் பிரதான அம்சங்களில் ஒன்றாக பேச்சு விளங்குகின்றது. இதனாலேயே சமூகவியல் அறிஞர்கள் மனிதனை பேசும் பிராணி என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். தன்னை அளவற்ற அருளாளன் என அறிமுகப்படுத்தும் அல்லாஹ் தனது பேரருளுக்கு சான்றாக தான் மனிதனைப் படைத்து அவனுக்குப் பேசும் ஆற்றலை வழங்கியிருப்பதைக் குறிப்பிடுகின்றான். அளவற்ற அருளாளன்ளூ குர்ஆனை அவன் கற்றுக்கொடுத்தான் மனிதனைப் படைத்து , அவனுக்கு பேசவும் கற்றுக் கொடுத்தான்.( 55: 1- 4) பேச்சு ஓர் ஆயுதம் பேச்சு என்பது ஓர் அருள் மட்டுமல்ல அது ஓர் ஆயுதம். துப்பாக்கிகளால் , பீரங்கிகளால் சாதிக்க முடியாததை ஓர் அறிபூர்வமான , உணர்ச்சியுடன் கூடிய உரையினால் சாதிக்க முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. தான் பெற்றிருந்த நாவன்மையை வைத்து மக்களைக் கவர்ந்து , அவர்களை கட்டி வைத்த உலகை ஆண்டவர்கள் தான் எத்தனைப் பேர். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ' பேச்சில் ஒரு வகை வசியம் உண்டு ' என்றார்கள். கத்தியின